உள்நாட்டு செய்திகள்புதியவை

அண்ணாவிற்கு வழங்கிய ஆதரவு தனக்கும் வேண்டும்: கோத்தா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றிப் பெறுவதற்கு வழங்கிய ஒத்துழைப்பினை தனக்கும் வழங்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஆட்சி மாற்றமே இன்று எல்லோரதும் எதிர்பார்க்கவும் அமைந்துள்ளது அனைவரது எதிர்பார்ப்பிற்கு அமைய ஆட்சி மாற்றம் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மெதமுல்ல ஸ்ரீ தர்ம கிரி கிராவ விகாரையில் மத வழிபாட்டில் ஈடுப்பட்டதைத் தொடர்ந்து டி. ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியகத்திற்கு சென்று தமது பெற்றோரின் உருவ சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார்கள்.

இதையடுத்து கூடியிருந்தவர்கள் முன்பு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பல நெருக்கடிகளின் போது வெற்றியினை காண்பதற்கு மத தலைவர்கள் உட்பட பொது மக்கள் அனைவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவினை வழங்கியுள்ளார்கள். இந்த ஆதரவினை தனக்கு வழங்குவது அவசியமாகும்.

புதியதொரு பயணத்தை நோக்கி செல்வதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் சாமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ உட்பட எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

கருத்து தெரிவிக்க