உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

‘ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பின் பின்னரே தீர்மானம்’

தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்கும் திறன் கொண்ட ஜனாதிபதி வேட்பாளரை தனது கட்சி ஆதரிக்கும் என்று வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைக்கப்படுவதற்கான கோரிக்கையையும் , தான் நிராகரித்ததாக அவர் கூறினார்.

மேலும், தனது கட்சி ஒரு வேட்பாளரை பரிந்துரைக்காது என்றும் தேர்தலில் ஒரு முக்கிய அரசியல் கட்சி வேட்பாளரை ஆதரிப்பதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் இது தொடர்பாக ஒரு முடிவு எடுக்கப்படும் என்று முன்னாள் வடக்கு முதல்வர் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க