உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மாதம்பிட்டி கொலை: எட்டு பேர் கைது

பாதாள உலக குழு உறுப்பினர் என அறியப்படும், ஆனமாலு ரங்கவும் மொஹம்மட் இம்ரானும் மாதம்பிட்டி மயானம் அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் எதிரணி பாதாள உலக கும்பலின் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு மட்டக்குளி பகுதியில் மூவரும் இன்றைய தினம் வத்தளை – ஹுணுபிட்டிய பகுதியில் ஐவரும் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு வாள்கள், மேலுமொரு ஆயுதம் மற்றும் இரு முச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை நேற்று கைதுசெய்யப்பட்டமூவரையும் இம்மாதம் 23 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க