உள்நாட்டு செய்திகள்புதியவை

காத்தான்குடியில் கைது செய்யப்பட்டோருக்கு விளக்கமறியல் நீடிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 63 பேரையும் எதிர்வரும் 30 திகதி வரை விளக்கமறியில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

காத்தான்குடி பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் இராணுவத்தினர், பொலிஸார் , நடத்திய சோதனையில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 64 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதில் ஒருவர் நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் ஏனைய 63 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களை இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 30 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கருத்து தெரிவிக்க