உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

போலி ஆவண தயாரிப்பு நிலையமொன்றை வைத்திருந்த நபர் கைது!

போலி ஆவண தயாரிப்பு நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டதில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹிங்குராங்கொட ரஜஎல பிரதேசத்தில் அவர் கைதாகியுள்ளார்.

பொலன்னறுவை குற்ற விசாரணைப் பிரிவினர் இதுதொடர்பான சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர்.

சந்தேகநபர் பொலிஸ் அறிக்கை, கல்வி சான்றிதழ்கள், சாரதி அனுமதிப்பத்திரம், நீதிமன்ற ஆவணம், காணி உறுதிப்பத்திரத்துடன் தொடர்புடைய ஆவணம், வைத்திய அறிக்கை மற்றும் கிராம சேவை அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படும் அறிக்கை என்பன குறித்த நிலையத்தில் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அங்கிருந்து அரச மற்றும் தனியார் பிரிவுக்கு சொந்தமான 86 போலி உத்தியோகபூர்வ முத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஹிங்குராங்கொட பிரதேசத்தை சேர்ந்த 51 வயதான நபரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க