உள்நாட்டு செய்திகள்புதியவை

ஊழலை முன்னெடுக்க இடமளிக்க முடியாது: ஜேவிபி

இந்த நாட்டில் சகல இனத்தவர்களும் எதிர்பார்க்கும் சகல தகுதிகளும் கொண்ட ஜனாதிபதி வேட்பாளரையே நாளை மறுதினம் களமிறக்குவதாக மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.

அத்துடன் பிரதான கட்சிகளின் பொய்களையும் ஊழல் குற்றங்களை நிராகரிக்கும் சகல மக்களும் தம்முடன் இணைந்து புதிய பயணத்தை ஆரம்பிக்க வருமாறும் அந்த கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போது கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இதனைக் குறிப்பிட்டார்.

மஹிந்த ராஜபக்ஷவை வீழ்த்தி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் மீண்டும் அவர்களை பலப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆட்சியில் பாரிய ஊழல்கள் இடம்பெற்றது. ஊழல் மோசடிகள் குறித்து பேசியவர்கள் மத்திய வங்கி ஊழலில் ஈடுபட்டனர்.

ஆகவே 2015 ஆம் ஆண்டும் ஊழல் ஆட்சியே முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஊழல் ஆட்சிகள் இனியும் இடம்பெறக் கூடாது. மாறி மாறி இவர்களின் ஊழலை முன்னெடுக்க இடமளிக்க முடியாது என்றும் கூறினார்.

கருத்து தெரிவிக்க