உள்நாட்டு செய்திகள்புதியவை

தொடரூந்துசேவை அபிவிருத்திக்கு ஆசிய வங்கி கடனுதவி

இலங்கை தொடரூந்து சேவையை நவீனமயப்படுத்துவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 160 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்கியிருக்கிறது.

இலங்கையின் தொடரூந்துசேவை அபிவிருத்திக்கென ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்படும் முதலாவது கடனுதவி இதுவென தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையைப் பொறுத்தவரையில் 2050 ஆம் ஆண்டாகும் போது அதன் சனத்தொகை 25 மில்லியனாக அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே இத்தகைய சனத்தொகை அதிகரிப்பிற்கு ஈடுகொடுப்பதற்கு பொதுப் போக்குவரத்துச்சேவையின் தரத்தை மேம்படுத்த வேண்டிய தேவையுள்ளது என ஆசிய அபிவிருத்தி வங்கியின் போக்குவரத்துப் பிரிவு விசேடநிபுணர் ஜொஹான் ஜோர்ஜெட் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க