வெளிநாட்டு செய்திகள்

இந்திய விமானத்தை வீழ்த்திய விமானிகளுக்கு விருது!

இந்திய விமானத்தினை வீழ்த்திய 2 பாகிஸ்தான் விமானிகள் அந்நாட்டின் உயரிய ராணுவ விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் முக்கிய செயலாற்றிய பாகிஸ்தான் விமானி முகமது நவுமன் அலி, அந்நாட்டின் உயரிய சிதார்-இ-ஜூரத் என்ற ராணுவ விருதினை பெறுகிறார்.

இதேபோன்று அவருடன் பணியாற்றிய ஹசன் மஹ்மூத் சித்திக், அந்நாட்டின் தம்கா-இ-சுஜாத் என்ற மற்றொரு உயரிய ராணுவ விருதினை பெறுகிறார்.

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியானது அடுத்த வருடம் மார்ச் 23ந்திகதி , பாகிஸ்தான் தின பேரணியின் பின்பு நடைபெறும் என அந்நாட்டு ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க