வெளிநாட்டு செய்திகள்

காஷ்மீர் விவகாரம் : ஐ நாவிடம் சீனாவும் கோரிக்கை

பாகிஸ்தானைத் தொடர்ந்து சீனாவும், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ரகசிய ஆலோசனை நடத்த ஐ. நா. பாதுகாப்பு சபையிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370 பிரிவை இந்திய அரசு ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. காஷ்மீர் குறித்து விவாதிக்க பாதுகாப்பு சபையிடம் கூட்டத்தை கூட்டுமாறு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி கேட்டுக்கொண்டார்.

பாகிஸ்தானைத் தொடர்ந்து சீனாவும், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ரகசிய ஆலோசனை நடத்த ஐ. நா. பாதுகாப்பு சபையிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் ஐ.நா. தூதர் ஒருவர் இதுபோன்ற கூட்டத்திற்கான கோரிக்கை மிக சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்டது, ஆனால் அதற்கான திகதி எதுவும் இதுவரை திட்டமிடப்படவில்லை என கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க