உள்நாட்டு செய்திகள்புதியவை

மனைவியை கொலை செய்தவர் தானும் தற்கொலை

புத்தளம் ஆணைமடு பகுதியில் மரமொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நபரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டவர் 42 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை என குறிப்பிடப்படுகிறது.

கடந்த 8 திகதி மனைவியை கொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த பெண்ணை நீண்ட கால குடும்ப தகராறு காரணமாக குறித்த நபர் கொலை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கருத்து தெரிவிக்க