உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

படையினரால் 23 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது

கிளிநொச்சி மாவட்டத்தில் படையினரால் 23 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆவணங்கள் இன்று ஒப்பமிட்டு கையளிக்கும் நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கிருஷ்ணபுரம் பகுதியில் படையினரின் பயன்பாட்டில் இருந்த காணிகளே இவ்வாறு இன்று கையளிக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்களிடம் கிளிநொச்சி இராணுவவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய அவர்களால் இதற்கான ஆவணங்கள் இன்று கையளிக்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க