விளையாட்டு செய்திகள்

ஒருநாள் தொடரும் இந்தியா வசமானது!

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டதை தொடர்ந்து, இரண்டாவது போட்டியில் 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிப் பெற்றது.

தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ள இந்திய அணி, நேற்றைய போட்டியில் வெற்றி பெற்று இருபதுக்கு – 20 தொடரை போலவே ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கியது.

அதன்படி குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நேற்றையதினம் இரவு 7.00 மணிக்கு இப் போட்டி ஆரம்பாமனது.

கருத்து தெரிவிக்க