உள்நாட்டு செய்திகள்புதியவை

‘தேர்தல் பிரச்சாரகளுக்கான நிதியை கட்டுப்படுத்த சட்டம் வேண்டும்’

பிரச்சார நோக்கங்களுக்கான வேட்பாளரின் செலவைக் கட்டுப்படுத்த அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தேர்தல் கண்காணிப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது (பெப்ரல் அமைப்பின்) தேர்தல் கண்காணிப்புக் குழுவின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்

கடந்த மாகாணத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரங்களுக்காக சராசரியாக ரூ 40 மில்லியனை செலவிட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) மூலம் பெறப்பட்ட தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளதாக ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டினார்.

அதன்படி, இதுபோன்ற அரசியல்வாதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தல் பிரச்சாரங்களுக்கான செலவினங்களைக் கட்டுப்படுத்த சட்டங்கள் நிறைவேற்றப்படாவிட்டால், தேர்தல்களின் நியாயத்தன்மை இல்லாமல் போகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்து தெரிவிக்க