உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்முக்கிய செய்திகள்

‘பெருந்தோட்டப் பகுதி மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும்’ :கோத்தா

பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு பொருளாதார மற்றும் வீடமைப்பு பிரச்சனைகளுக்கு தீர்வை பெற்றுத்தருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்று கண்டி கட்டுகஸ்தோட்டையில் உள்ள விநாயகர் ஆலயத்தில் வழிபாடுகளை முடித்துக் கொண்டு அங்கிருந்த மக்களுடன் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தாம் பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் மக்களின் பிரச்சனைகளை அறிந்து உள்ளதாகவும் அதற்கு உரிய தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் பிரச்சினை பற்றியும்  அறிந்து வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் தமது அரசாங்கத்தின் கீழ் இந்த பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க