புதியவைவிளையாட்டு செய்திகள்

தொடரை கைப்பற்றுமா இந்தியா; இறுதிப் போட்டி இன்று

இந்தியா – மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இலங்கை நேரப்படி இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டதை தொடர்ந்து, இரண்டாவது போட்டியில் 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிப் பெற்றது.

தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ள இந்திய அணி, இன்று போட்டியில் வெற்றி பெற்று இருபதுக்கு – 20 தொடரை போலவே ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் களம் இறங்குகிறது.

இந்திய அணிக்கு இன்றைய போட்டியில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு ஆரம்பத்தில் இருந்து இந்த தொடர் ஏமாற்றத்தையே அளித்து வருகிறது.

இதேவேளை இன்றைய போட்டியிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அந் நாட்டு வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க