உள்நாட்டு செய்திகள்புதியவை

பாகிஸ்தான் சுதந்திர தினம்: இலங்கையில் கொடியேற்றம்

பாகிஸ்தானின் 73வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு இலங்கையில் அமைந்துள்ள பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகராலயம் கொடியேற்ற வைபவத்தினை மேற்கொண்டுள்ளது.

பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகராலய பணிப்பாளர் ( கலாநிதி ~ஹித் அஹ்மத் ஹமத் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்விற்கு இலங்கை வாழ் பாகிஸ்தான் பிரஜைகள் கலந்து கொண்டனர்.

இதன்பொழுது, பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சுதந்திர தின செய்திகள் வாசிக்கப்பட்டன.

பாகிஸ்தான் அனைத்து உலக அரங்கிலும் இலங்கைக்கான நிபந்தனையற்ற ஆதரவினை விசேடமாக தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான ஆதரவினை வழங்கும் என இதன் போது உயர் ஸ்தானிகர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க