உள்நாட்டு செய்திகள்புதியவை

புதிய கூட்டணி: ஐ.தே.கவிற்குள் நெருக்கடி

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணியை ஸ்தாபிக்கும் நடவடிக்கைகள் நெருக்கடியை சந்தித்துள்ளன.

வேட்பாளரை அறிவித்த பின்னரே கூட்டணி தொடர்பாக பேசப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் பலர் தெரிவித்து வரும் நிலையில் கூட்டணி அமைக்க விரும்பும் கட்சிகள் அதனை எதிர்த்து வருவதால் நெருக்கடி நிலை தோன்றியுள்ளது.

கூட்டணிதொடர்பில் ஏலவே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்பட நிலையில் 17 ஆம் திகதி அலரி மாளிகையில் கூட்டணிக்கான கலந்துரையாடலை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதில் கலந்துக்கொள்ளவுள்ளார். கூட்டணிக்கான பொது இணக்கப்பாடு ஏற்படும் பட்சத்தில் வேட்பாளர் குறித்த அறிவிப்பை வழங்க தயாராக உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க