உள்நாட்டு செய்திகள்புதியவை

சொகுசு பேருந்து இறக்குமதி: நிதியமைச்சை சாடும் அர்ஜுன!

பொது போக்குவரத்துக்காக 2000 சொகுசு பேருந்துகளை இறக்குமதி செய்வதை நிதி அமைச்சின் அதிகாரிகள் தாமதப்படுத்தி வருவதாக அமைச்சர் அர்ஜுன ரனதுங்க இன்று (ஆகஸ்ட் 14) குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நிலைமை தொடருமானால் அவர் தனது அரசியல் வாழ்க்கையில் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தொம்பே பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“நிதி அமைச்சின் அதிகாரிகள் இந்த இறக்குமதிகளைத் தடுக்கிறார்கள் என்றால், நாம் ஏன் அரசியலில் ஈடுபட வேண்டும்?” எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்து தெரிவிக்க