உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

விமான நிலையங்கள் சூழவுள்ள 5 கிலோ மீற்றர் பரப்புக்குள் பட்டம் பறக்க விட தடை!

இலங்கையிலுள்ள சர்தேச விமான நிலையங்கள் மற்றும் சிவில் விமான நிலையங்கள் என்பன அமைந்துள்ள பிரதேசத்தைச் சூழவுள்ள 5 கிலோ மீற்றர் பரப்புக்குள் பட்டம் பறக்க விடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

இத்தடையை மீறுவது தண்டனைக்குரிய குற்றம் என விமான நிலைய முகாமையாளர் எச்.எஸ். ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதன்படி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம், மத்தளை சர்வதேச விமான நிலையம், பாலி, சீகிரிய, கொக்கல போன்ற சிவில் விமானநிலையங்கள் என்பனவற்றுக்கு இந்த சட்டம் அமுலாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க