விளையாட்டு செய்திகள்

கொள்ளையர்களை விரட்டிய முதியவர்கள்: பாராட்டிய ஹர்பஜன் சிங்

திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே கொள்ளையர்களை தைரியமாக எதிர்கொண்ட வயதான தம்பதியை பாராட்டி ஹர்பஜன் சிங் அசத்தலாக ட்வீட் செய்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் கடையம் கல்யாணிபுரத்தில் முதியவர் ஒருவரது தோட்டத்து வீட்டில் நேற்று முன்தினம் இரவு மூகமுடி அணிந்த கொள்ளையர்கள் புகுந்து தாக்க முற்பட்டனர்.

இதையடுத்து வயதான கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து அருகில் இருந்த பொருட்களை எடுத்து கொள்ளையர்கள் மீது வீசினர்.

கொள்ளையர்களை விரட்டியடிக்கும் காட்சி அவர்களது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது.

அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அதனை பார்த்த பலரும் வயதான தம்பதியினரின் தைரியத்தை பாராட்டினர்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தனக்குரிய சிறப்பான வகையில் தமிழில் அசத்தலாக பாராட்டியுள்ளார்.

ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘திருட்டு பசங்க எல்லாத்துக்கும் இந்த வீடியோ பாத்தா அல்லு விடும். என்ன #வீரம் பாசத்துக்கு முன்னாடி நான் பனி பகைக்கு முன்னாடி #புலி ன்னு சொல்ர மாதிரி #மெர்சல் காட்டிட்டாங்க. இது தமிழனின் #நேர்கொண்டபார்வை” என பதிவிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க