உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

தடைகளை தாண்டி செஞ்சோலை நினைவுதூபி திறந்துவைப்பு

கடந்த 2006 ஆம் ஆண்டு இன்றைய நாளில் ஸ்ரீலங்கா விமானப் படை குண்டுவீச்சு விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் கொல்லப்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் செஞ்சோலை வளாகப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு இன்றைய தினம் தமிழர் தாயகப் பகுதி எங்கும் புலம்பெயர் நாடுகளிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் குறித்த தாக்குதல் இடம்பெற்ற வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்துக்கு செல்கின்ற வீதியின்  தொடக்கத்திலே  அமைக்கப்பட்டிருந்த செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உடைய நினைவு தூபி பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நினைவு தூபி வேலைகளை மேற்கொண்டு வந்தவர்களை புதுக்குடியிருப்பு போலீசார் அழைத்து விசாரணைகளை மேற்கொண்டதோடு குறித்த இடத்தில் படங்கள் பாதிக்கவோ  அவர்களுடைய பெயர்களை எழுதவோ தடைவிதித்து இருந்ததோடு நினைவுத் தூபியை மட்டும் கட்டலாம் என்பதையும் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் இந்த குறித்த நினைவு தூபியிலே நிரந்தரமாக மாணவர்களுடைய புகைப்படங்களை பதிக்க  முடியாவிட்டாலும் மாணவர்களுடைய புகைப்படங்கள் பாதிக்கப்பட்டு செஞ்சோலை வளாக வீதி எனஎழுதப்பட்டு  அழகான  முறையில்  குறித்த நினைவு தூபி  திறந்துவைக்கப்பட்டது.

குறித்த நினைவு தூபி இணை குறித்த வளாகத்தில் உயிரிழந்தவர்களின் உடைய உறவுகள் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் உள்ளிட்டவர்கள் இணைந்து திரைநீக்கம் செய்து வைத்ததோடு நாடாவை வெட்டி திறந்து வைத்தனர்.

கருத்து தெரிவிக்க