உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

‘கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்கவுள்ளதாக அறிவிப்பு’

மாணவர்களின் நலன் சார்ந்து மூன்று கோரிக்கைகளை முன்வைத்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நாளை 15 ஆம் திகதி வியாழக்கிழமை தமது கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினால் கடந்த 13 ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக் கழக தகுதி வாய்ந்த அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தின் மூலம் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பட்டக் கல்வியை நிறைவு செய்த பல மாணவர்களுக்கு இது வரை பட்டமளிப்பு நடாத்தப்படவில்லை.
இதற்கு வேந்தர் நியமனம் செய்யப்படாமை காரணமாகச் சொல்லப்படுகிறது.
எனவே உடனடியாக வேந்தர் நியமனத்தை விரைவாக நடாத்துவதன் மூலம் பட்டமளிப்பு விழாவை நடாத்த வேண்டும் என்றும் , மூன்று மாத காலத்துக்கு மேலாக வெளியிடப்படாமலிருக்கும் பரீட்சை முடிவுகளை வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிட்டு  நாளை 15 ஆம் திகதி வியாழக்கிழமை தமது கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்கவுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க