உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் விதிமுறைகள் மாற்றம்

ஜனாதிபதி தேர்தலில் மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவார்களேயானால் செல்லுபடியாகும் வாக்குகளில் 50 வீதமான வாக்குகளை வெற்றிபெறும் வேட்பாளர் பெற்றுக்கொள்ளுவது அவசியமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக செல்லுபடியாகும் வாக்குகளிலிருந்து ஐம்பது வீதத்தை ஒருவர் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அவ்வாறு 50 வீத வாக்குகளை எவரும் பெறமுடியாத விடத்து அதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்படும்.

வேட்பாளர்கள் எவரும் 50 வீதம் வாக்குகளைப் பெறாதவிடத்து, மீண்டும் தேர்தல் நடாத்தி வாக்களிப்புக்கான அவசியம் கிடையாது.

மூன்று வேட்பாளர் அல்லது அதற்கு அதிகமான வேட்பாளர்கள் போட்டியிட்டால் மட்டுமே செல்லுப்படியாகும் வாக்குகளிலிருந்து 50 வீதத்தை பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியமுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்து தெரிவிக்க