உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

மகாநாயக்க தேரர்களிடம் ஆசி பெற்றார் கோட்டா!

கண்டிக்கு இன்று (14) பயணம் மேற்கொண்டிருந்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்றார்.

மகாநாயக்க தேரர்களை சந்திப்பதற்கு முன்னர் தலதாமாளிகைக்கு சென்ற கோட்டாபய, அங்கு விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, பொதுஜன பெரமுனவின் நிறுவுனர் பஸில் ராஜபக்ச உட்பட கூட்டு எதிரணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடன் சென்றிருந்தனர்.

 

கருத்து தெரிவிக்க