உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

‘சாமிமலை ஆற்றில் ஆணின் சடலம் கண்டெடுப்பு ‘

மஸ்கெலிய பொலிஸ்பிரிவிற்குற்ப்பட்ட  சாமிமலை  ஸ்டொக்ஹோம் தோட்ட நீரோடை ஒன்றில் ஆண் ஒருவரின் சடலம்  கண்டுபிடிக்கப்பட்டள்ளது .

இன்று காலை அவ்வழியே சென்ற பெண்கள் சடலம் ஒன்று ஆற்றில் கிடப்பதை கண்டு  மஸ்கெலிய பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அவ்விடத்திற்கு விரைந்த மஸ்கெலிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க குழுவினர் இந்த மரணம் சம்பந்தமான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மரணம் குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் அட்டன் மாவட்ட நீதிபதி சம்பவ இடத்துக்கு வருகை ததந்து சடலத்தை பார்வையிட்ட பின்னரே மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப் படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி  இறந்தவர் சாமிமலை மல்லியப்பு தோட்டத்தை சேர்ந்த  38  வயதுடைய பெருமாள் ஜெகதீஸ்வரன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவரது தாய் தந்தையர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும்  இவர் வீட்டில் தனிமையாக வசித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க