உள்நாட்டு செய்திகள்புதியவை

உயிர்த்த ஞாயிறு தெரிவுக்குழுவின் காலத்தை நீடிக்கக் கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் சாட்சியங்களை பதிவுசெய்துவரும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் ஆயுட்காலத்தை நீடிக்கவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் அறிக்கையை எதிர்வரும் 23ஆம் திகதி சமர்ப்பிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இந்த குழுவின் முன் சாட்சியமளிக்க ஜனாதிபதிக்கு பல திகதிகள் வழங்கப்பட்டபோதும் அவரிடம் இருந்து பதில்கள் எவையும் இல்லை.

இந்தநிலையில் அவர் எந்த திகதியிலும் வந்து சாட்சியமளிக்கமுடியும்.

எனவே அவரின் சாட்சியத்துக்காக குழுவின் செயற்பாட்டு காலத்தை நீடிக்க கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் பொன்சேகா நேற்று இடம்பெற்ற நிகழ்வின்போது தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க