உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.க. தலைமையில் கூட்டணி – சனியன்று இறுதி முடிவு!

” ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் ‘ஜனநாயக தேசிய முன்னணி’ என்ற பெயரில் உதயமாகவுள்ள புதிய கூட்டணி தொடர்பில் எதிர்வரும் சனிக்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படும்.” என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
குறித்த கூட்டணியை நாட்டுக்கு தெரியப்படுத்தும் திகதியும் அன்றைய தினம்  நிர்ணயிக்கப்படவுள்ளது என்றும் அவர் கூறினார்.
ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையிலான விசேட கூட்டம் நேற்றிரவு அலரிமாளிகையில் நடைபெற்றது.
இதன்போது கூட்டணி விவகாரத்தை கையாள்வதற்கு உப குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த உபகுழுவே சனிக்கிழமை கூடி இறுதி முடிவெடுக்கவுள்ளது.

கருத்து தெரிவிக்க