உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

21/4 தாக்குதல் – சாட்சியமளிக்குமாறு மைத்திரிக்கு அழைப்பாணை!

21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திவரும் விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளிக்குமாறு  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் கடிதம் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என விசேட தெரிவுக்குழு வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான  விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகள் இம்மாதம் 20,21,23,23 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

எனவே, மேற்படி நான்கு நாட்களில் பொருத்தமான தினத்தில் சாட்சியளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

அதேவேளை, ஜனாதிபதியால் அறிவிக்கப்படும் இடத்துக்கேசென்று அவரிடம் சாட்சியம் பெறுவதற்கு தயாராகவே இருக்கின்றோம் என தெரிவுக்குழு உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கருத்து தெரிவிக்க