உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

சஜித் நடத்தவிருந்த முக்கிய சந்திப்பு ஒத்திவைப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், அக்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் நேற்றிரவு (13) நடைபெறவிருந்த சந்திப்பு 19 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை. எனினும், 19 ஆம் திகதி ஐ.தே.கவின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது என்றும், அந்த கூட்டத்தின் பின்னர் மேற்படி சந்திப்பு இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர், புதிய அரசியல் கூட்டணி உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

கருத்து தெரிவிக்க