உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

சில பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அதிக மழை காரணமாக களு, கிங் மற்றும் களனி கங்கைகளின் நீர்மட்டம் அபாய நிலையை அடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

களு கங்கையின் நீர் மட்ட உயர்வு காரணமாக இரத்தினபுரி, தவலம பிரதேசங்களும், களனி கங்கையின் நீர் மட்ட உயர்வு காரணமாக தெரணியகல மற்றும் கிதுல்கல பிரதேசங்களும் நீரில் மூழ்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் தாழ்நிலப் பகுதியில் வாழ்வோர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயாராக இருக்குமாறும் இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க