உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

கோட்டாவுக்கு எதிராக களமிறங்க தயார் – பொன்சேகா இன்று அறிவிப்பு!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் பெயரிடப்படும் ஜனாதிபதி வேட்பாளருக்கே தான் ஆதரவளிப்பார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சி உறுப்பினர்கள்  பலகோணங்களில் கருத்துகளை முன்வைத்துவருகின்றனர். எனவே, முரணான கருத்துகளை முன்வைக்காமல் களநிலைவரத்தை கண்காணித்து சிறப்பானதொரு வேட்பாளரை அறிவிக்கும் முயற்சியில் இறங்கவேண்டும்.

எந்த கட்டமைப்பாக இருந்தாலும் அதன் தலைமைக்கு கட்டுப்படவேண்டும். இதன்படி ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் பெயரிடப்படும் நபருக்கே எனது ஆதரவு.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டால் அந்த கோரிக்கையை ஏற்று – சவால்களுக்கு வெற்றிகரமாக முகம்கொடுப்பதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்.

தற்போது நான் செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டுவருகின்றேன். எனவே, ஜனாதிபதி வேட்பாளருக்கான அனைத்து தகுதிகளும் எனக்கு இருக்கின்றன.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ராஜபக்சக்களுடன் இணைந்து செயற்படமாட்டேன்.” என்றும் அவர் கூறினார்.

கருத்து தெரிவிக்க