உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

‘பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு’

எதிர்காலத்தில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க எதிர்பார்த்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொலிஸ் கான்ஸ்டபிள் முதல் பொலிஸ் பரிசோதகர்கள் வரை சுமார் 33 ஆயிரம் பேருக்கு 10 வருடங்களாக பதவி உயர்வு வழங்கப்படாதுள்ளது.

இதனால் இதுதொடர்பில் அதிருப்தி நிலவுவதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த பதவி உயர்வுகள் வழங்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க