உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

‘ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வேலைத்திட்டம்’

ஆசிரியர் சேவையில் காணப்படும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தேசிய கல்வியியற் கல்லூரிகளின் பீடாதிபதிகள், உப பீடாதிபதிகள் மற்றும் ஆசிரியர் கல்லூரிகளின் அதிபர் பதவிக்கான ஆலோசனைகள் இன்றையதினம் இணையதளத்தில் வெளியாகியுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை ஆசிரியர் கல்வி சேவையின் முதலாம் தர அதிகாரிகளின் விண்ணப்பங்களை கோருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெற்றிடம் காணப்படும் பதவிகள் மற்றும் சேவை, இடம், கட்டமைக்கப்பட்ட நேர்முக பரீட்சை புள்ளி ஒழுங்கு விதிகள், விண்ணப்பிப்பதற்கு உரிய தகைமைகள் உள்ளிட்ட சகல தகவல்கள் கல்வியமைச்சின் இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க