உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்முக்கிய செய்திகள்

’50 ரூபாய் மேலதிக கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி’

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ரூபாய் மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதுதொடர்பான யோசனையை இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்து நிறைவேற்றியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்துடன், இந்த 50 ரூபாய் கொடுப்பனவும் இணைக்கப்படவுள்ளது.

ஏற்கனவே இந்த யோசனை முன்வைக்கப்பட்ட போது , தமது அமைச்சின் ஊடாக இந்த நிதியை வழங்குவதற்கு அமைச்சர் நவீன் திஸாநாயக்க எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.

கருத்து தெரிவிக்க