உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

‘மட்டக்களப்பில் பாராளுமன்ற பொதுக்கணக்கு குழுக்கூட்டம்’

பாராளுமன்ற பொதுக்கணக்கு குழுக்கூட்டம் செவ்வாய்கிழமை (13) மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் கொட்டலில் பாராளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் தவிசாளர் எம்.ஏ..சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தெரிவுக்குழுவின் உறுப்பினர்களான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி.ஆசும் மாரசிங்க, எம்.திலகராஜா, விஜயபால கெட்டியாராச்சி, எஸ்.எம்.உமையிஸ், உள்ளிட்ட பலர் ஆகியோர் கலந்து கொண்டு பொதுக்கணக்கு குழு தொடர்பாக ஆராயப்பட்டன.

சிவில் அமைப்புக்கள் அரச திணைக்களங்களிடமும் பொது மக்களிடமும் இருந்து கருத்துக்கள் கேட்கப்பட்டு அதற்கான தீர்வுகள் தொடர்பான கருத்துரைகளையும் தவிசாளர் என்ற வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.மந்திரன் பதிலளித்தார்.

பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுவாக விவசாயம், மீன்பிடி, மற்றும் மற்றும் கால்நடை போன்றவற்றிற்கான நிதி ஒதுக்கீடு போதாமையை சுட்டிக்காட்டி இருந்தனர்.

அத்தோடு களுதாவளையில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையம் இதுவரை காலமும்திறக்கப்படாமை சுட்டிக்காட்டப்பட்டது.

அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஆசும் மாரசிங்க விவசாய அமைச்சருடன் உரையாடி அடுத்த மாதம் திறப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொழில் வாய்ப்பை உருவாக்கும் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்வது சிறந்ததாகும். அதேநேரம் காகிதஆலையை மீண்டும் திறப்பது கைத்தொழில் பேட்டைகளை நிறுவுவதற்கு அதிகளவான நிதியினை ஒதுக்குவது சிறந்ததாகும்.

முட்டக்களப்பு மாவட்டத்தில் உற்பத்தியாகும் கஜூ, மீன், தேன், அரிசி, போன்றவற்றிற்கான தரத்தினை நிர்ணகிக்கின்ற நாமம் இன்றியே இவை விற்பனையாகி வருகின்றன.

இதற்கு தரநிர்ணய நாமத்தினை நிர்ணகிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டப்பட்டன.

இம்முறை மட்டக்களப்பில் ஏற்பட்ட வரட்சியினால் கால் நடைகளின் உயிரிழப்பு மற்றும் விவசாயிகளுக்கு ஏற்பட்ட நட்டங்களுக்கு பொது நடைமுறையை கடைப்பிடிக்கும்படியாக குழு சார்பாக எம்.திலகராஜா பாராளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்திற்கு பிரதேச செயலாளர்கள், உதவித்தட்டமிடல் பணிப்பாளர், திணைக்கள தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள், தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க