உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

விபத்தில் 18 வயது இளைஞன் உயிரிழப்பு!

திருகோணமலை – மட்டக்களப்பு வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இரு சக்கர
மோட்டார் வாகனத்தில் பயணம் செய்த இருவரில் 18 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இறந்தவருடன் பயணித்த 19 வயது மாணவர் படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை தோப்பூர் பிரதேசத்தில் ஜின்னா நகரை சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

இவ் இருவரும் பயணித்த இருசக்கர மோட்டார் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை
இழந்துள்ள நிலையில் எதிரே இருந்த கம்பி வேலியடன் மோதியதால் இச்சம்மபவம்
இடம்பெற்றுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க