உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கம்பெரலிய திட்டத்தின்கீழ் இந்து, கிறிஸ்தவ ஆலயங்கள் புனரமைப்பு

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு அமைய மட்டக்களப்பு மாவடத்தில் உள்ள கிறிஸ்த ஆலயங்கள்; புனரமைப்பு மற்றும் நிர்மான பணிகள் இடம்பெற்று வருகின்றன

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா .ஸ்ரீநேசனின் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மட்டக்களப்பு மாமாங்கம் சகாயபுரம் தூய சதா சகாய அன்னை ஆலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஆலய முகப்பு மண்டபம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

ஆலய பங்கு தந்தை ஆர் திருச்செல்வம் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் கலந்துகொண்டு திறந்து வைத்தார் .

இந்நிகழ்வில் மாமாங்கம் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி வை .கலைச்செல்வி இ மாநகர சபை உறுப்பினர்களான பி .ரூபராஜன் இ டி .மதன் இ பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர் பிரேம்இ அருட்தந்தை லெஸ்லி ஜெயகாந்த் மற்றும் மக்கள் கலந்துகொண்டனர்.

கருத்து தெரிவிக்க