இலங்கை

யாழ்ப்பாணத்தில் கிளைமோர் தாக்குதல்!

வடமராட்சியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மணல் கடத்தல்காரர்களால் தான் இத்தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர். மணல் கடத்தலைக் தடுத்த நிறுத்த பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுப்பது வழமையானது. அதுபோன்றே இன்றும் சோதனை நடவடிக்கைக்கு தயாரான போது வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இராணுவத்தினரும் பொலிஸாரும் ஆரம்பித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க