இலங்கை

கொரோனா உச்சமடையந்தால் பொதுத்தேர்தலில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது!

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்திருக்கிறது. இதேவேளை நாட்டின் பொதுத்தேர்தலை நடத்துவது தொடர்பிலும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. எது எவ்வாறாயினும் சமூக இடைவெளியை கடைபிடிக்க மறுக்கும் மற்றும் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்ற தவறுமிடத்தில் பொதுத்தேர்தலை நடாத்த முடியாது என சுகாதார வைத்திய சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தனிமைப்படுத்தல் சட்டத்தையும் சமூக இடைவெளியை பேணாது விடின் இன்னும் அடுத்த மூன்று வாரங்களில் கொரோனா உச்சமடைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க