வடக்கு செய்திகள்

13 ஆம் ஆண்டு நினைவு நாளில் பங்கேற்க அழைப்பு!

செஞ்சோலையில் உயிர்நீத்த மாணவச் செல்வங்களின் 13 ஆம் ஆண்டு நினைவு நாளில் பங்கேற்க்குமாறு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

கடந்த 2006 ஆம் ஆண்டு சிறிலங்கா விமானப்படையின் கிபிர் விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் செஞ்சோலை வளாகத்தில் 53 மாணவர்கள் உடல் சிதறி பலியாகினர் தமிழர்கள் மீதான கட்டவிழ்த்து விடப்பட்ட இன அழிப்பின் ஒரு கட்டமாக இந்த குண்டுத் தாக்குதல் இடம்பெற்று இன்று 13 வருடங்கள் ஆகின்றது

அந்த வகையிலே வன்னிக்குரோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் 14.08.2019 அன்று வள்ளிபுனம் இடைக்கட்டு சந்தியில் காலை 9 மணிக்கு செஞ்சோலையில் உயிர்நீத்த எங்கள் மாணவச் செல்வங்களின் 13 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன

அந்த வகையிலே ஸ்ரீலங்கா ராணுவத்தின் உடைய மிலேச்சத்தனமான குண்டு வீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி மாணவச் செல்வங்களின் அஞ்சலி நிகழ்வில் அஞ்சலி செலுத்துவதற்காக மதத் தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் இன உணர்வாளர்கள் அனைவரையும் கலந்துகொண்டு நினைவு கூற வருமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

கருத்து தெரிவிக்க