உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

வெளிநாட்டு கழிவுப்பொருட்களை நாட்டிலிருந்து அகற்ற நடவடிக்கை

132 கொள்கலன்களில் உள்ள கழிவுப் பொருட்களை நாட்டில் இருந்து அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிகார சபையின் தலைவர் இசுறு தேவப்பிரிய இது தொடர்பாக தெரிவிக்கையில் சம்பந்தப்பட்ட முதலீட்டு சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

நாம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைவாக சம்பந்தப்பட்ட நிறுவனம் கழிவுப் பொருட்களை கொள்கலன்களில் அடைத்துள்ளன.

இதற்கமைவாக இந்த கழிவுப்பொருட்கள் 332 கொள்கலன்களில் அடைக்கப்பட்டுள்ளன.

எதிர் வரும் தினங்களில் அவற்றை நாட்டில் இருந்து அகற்ற முதலீட்டு சபை நடவடிக்கை மேற்கொள்ளும்.

கருத்து தெரிவிக்க