உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

அரசியலுடன் மதத்தை கலக்கக்கூடாது – மல்கம் ரஞ்சித்

ஞாயிற்றுக்கிழமைகளிலும் பூரணைத்தினங்களிலும் பிரத்யேக வகுப்புக்கள் தடைசெய்யப்பட வேண்டும் என்று கோரிக்கைக்கு தாம் ஆதரவளிப்பதாக கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இன்று காலை கொழும்பின் புறநகர் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின்போதே அவர் இதனைக்குறிப்பிட்டார்.

சமயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற அடிப்படையில் இந்த யோசனை வரவேற்க்கத்தக்கது என்றும் அவர் தெரிவி;த்தார்.

இதேவேளை மதமும் அரசியலும் இன்று இணைந்திருப்பதை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று குறிப்பிட்ட அவர் இரண்டு வேறுப்பட்ட விடயங்கள் என்று தெரிவித்தார்.

அரசியலில் மதத்தை கலப்பது ஒரு சுயநல நடவடிக்கையாகும் என்றும் மல்கம் ரஞ்சித கூறினார்.

கருத்து தெரிவிக்க