உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவருக்கும் முட்டுக் கொடுக்கவில்லை- சுமந்திரன்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவருக்கும் முட்டுக் கொடுக்கவில்லை ஓர்மையுடன் குரல் கொடுத்து தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழ அடித்தளமிட்டு வருகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவருக்கும் முட்டுக் கொடுக்கவில்லை ஓர்மையுடன் குரல் கொடுத்து தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழ அடித்தளமிட்டு வருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்து சமகால அரசியல் நிலவரம் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் மக்கள் சந்திப்பும் கருத்தரங்கும் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் திங்கட்கிழமை 12.08.2019 இடம்பெற்றது.

அங்கு சமர்ப்பிக்கப்பட்ட சுமார் 35 இற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து தொடர்ந்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

கேள்வி பதில் சில மாதங்களுக்கு முன்னர் யாழப்பாணத்திலும் சாவகச்சேரியிலும் இவ்வாறான மக்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்து புரிந்துணர்வை ஏற்படுத்தும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தோம்.

இத்தகைய கருத்தரங்குகளுக்கு கட்சி ஆதரவாளர்களை விட கட்சியை விமர்சிப்பவர்களைத்தான் அழைத்திருந்தோம்.

ஏனென்றால் கட்சியை விமர்சிப்பவர்களின் கருத்தும் முக்கியம் என்பதால் நாம் அவ்வாறு செய்தோம்.

இன்றைய அரசாங்கத்திற்குச் ஆதரவாகச் செயற்பட்டதன் மூலமாக அடைந்தது என்ன என்ற கேள்விகளே அங்கும் பரவலாக எழுந்தன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை சீர்குலைந்திருந்தால் செய்யக் கூடியதாக இருந்த விடயங்களைக் கூட முடியாதிருந்திருக்கும் என்பது மக்களுக்குத் தெரியும்.

இந்த ஒற்றுமையாவது இருந்திருக்காவிட்டால் இதுவரைக்கும் நாங்கள் செய்திருப்பதைக் கூட செய்திருக்க முடியாமற் போயிருக்கும்.

எங்களுக்கு இருப்பது இரண்டு பலங்கள் ஒன்று எங்களது ஒற்றுமை. மற்றையது சர்வதேசம். ஆகவே இவை இரண்டையும் இறுகப் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

ஜனநாயகப் பாதையை மீறி எதனையும் செய்வதால் எமக்காக சர்வதேச ஆதரவு ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை.” என அவர் மேலும் கூறியுள்ளார் .

கருத்து தெரிவிக்க