உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

மன்னாரில் அமைதியான முறையில் புனித ஹஜ் பெருநாள் தொழுகைகள்..!

நாட்டில் உள்ள முஸ்ஸீம் மக்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை (12) புனித ஹஜ் பெருநாளை கொண்டாடுகின்றனர்.
அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள முஸ்ஸீம் மக்களும் இன்றைய தினம் புனித ஹஜ் பெருநாளை அமைதியான முறையில் கொண்டாடுகின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் ஆண்,பெண் இருபாலருக்கும் தனித்தனியாக பெருநாள் தொழுகைகள் இடம் பெற்றது.
மன்னார் மூர்வீதி ஜீம்மா பள்ளி வாசலில் காலை 8 மணியளவில் பெருநாள் தொழுகை இடம் பெற்றது.
மூர்வீதி ஜீம்மா பள்ளிவாசல் மௌலவி எஸ்.ஏ.அஸீம் தலைமையில் பெருநாள் தொழுகைகள் மற்றும் சிறப்பு பிரார்த்தனைகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க