உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

‘குட்டி யானைகளுடன்’ சஜித் நாளை முக்கிய பேச்சு!

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், அக்கட்சியின்  பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான விசேட  சந்திப்பொன்று நாளை (13) இரவு 8 மணிக்கு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் மலரவுள்ள புதிய அரசியல் கூட்டணி சார்பில் சஜித் பிரேமதாசவே ஜனாதிபதி  வேட்பாளராக போட்டியிட வேண்டும் என ஐ.தே.கவின் பின்னிலை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

அத்துடன், ஜனாதிபதி வேட்பாளர்  விவகாரம் குறித்து முடிவெடுப்பதற்காக  கட்சியின் செயற்குழு கூட்டத்தையும், நாடாளுமன்றக் குழுவையும் ஒரே நேரத்தில் கூட்டுமாறும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையிலேயே சஜித்தை நாளை  இரவு சந்திக்கவுள்ளனர்.

 

 

கருத்து தெரிவிக்க