உள்நாட்டு செய்திகள்

‘மீண்டும் வெள்ளைவேன் யுகம் வேண்டுமா?’

” உடையையும்  , முகத்தையும் மாற்றுவதால் மட்டும் நாட்டில் மாற்றம் வரப்போவதில்லை.” – என்று ஐ.தே.கவின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

குருணாகலை பகுதியில் நேற்று  (11) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு  கூறினார்.

” போர் முடிவடைந்த பின்னர்கூட – 10 ஆண்டுகளாக நாட்டைக் கட்டியெழுப்ப முடியாதவர்களால் ( ராஜபக்ச ஆட்சி) , இனிவரும் ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் அதை எவ்வாறு செய்ய முடியும்?

வெள்ளைவேன் கலாசாரத்துக்கு நாமே முடிவு கட்டினோம். வீழச்சியடைந்த பொருளாதாரத்துக்கும் புத்துயிர் கொடுத்தோம்.

எனவே, மீண்டும் வெள்ளை வேன் யுகத்தை நோக்கி பயணிக்கலாமா?” – என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

 

கருத்து தெரிவிக்க