உள்நாட்டு செய்திகள்புதியவை

‘ஆடையும் முகமும் மாறுவதால் மாற்றம் ஏற்பட்டு விடாது’

தமது ஆடையினையும் முகத்தியும் மாற்றுவதால் எந்தவித மாற்றங்களும் ஏற்பட்டு விட போவதில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட்டு எதிரணியை சாடியுள்ளார்.

குருநாகல் பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஒரு தசாப்த காலமாக நாட்டை ஆட்சி செய்த பொழுது ஏற்படுத்த முடியாத மாற்றத்தை எதிர்வரும் ஆட்சியில் ஏற்படுத்தி விட முடியுமா என அவர் கேள்வியும் எழுப்பியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே. கவின் பிரதான போட்டி கட்சியாக கருதப்படும் பெரமுன அணியின் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க