உள்நாட்டு செய்திகள்

சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்த நடவடிக்கை!

இலங்கையில் இருந்து சபரிமலைக்கான யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

முகத்துவாரம் நாவலர் மணி மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற இந்து சமய மறுமலர்ச்சிக்கான நடமாடும் மக்கள் சேவையை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றுகையில் அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து சபரிமலைக்கு செல்லும் யாத்திரிகர்களின் வசதி கருதி இந்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்து சமய அலுவல்களை ஒழுங்குபடுத்தும் மற்றுமொரு அமைச்சரவைப் பத்திரமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இந்நிகழ்வில் இந்து சமய அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான அடையாளஅட்டைகள் வழங்கப்பட்டன.

கருத்து தெரிவிக்க