உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி: மூவர் கைது

மட்டக்களப்பு வவுணதீவு பொன்னாங்கன்னிச்சேனை ஆற்றுப் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களிடம் இருந்து 45 லீற்றர் கசிப்பும் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் லீற்றர் கோடா மற்றும் உபகரணங்களை கைப்பற்றியதாக வவுணதீவு காவல்துறையினர் .

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய இன்று அதிகாலை வவுணதீவு பொலிஸாரும் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் போதை ஒழிப்பு தடுப்பு பிரிவும் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கைதானவர்கள் கன்னங்குடா, ஆயித்தியமலை, பாவக்கொடிச்சேனை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க