உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

நினைவுத்தூபியில் படம், பெயர் பொறிக்க அனுமதி மறுப்பு!

பிரதேச சபையின் அனுமதியுடன் செஞ்சோலை நினைவுத்தூபி அமைக்கலாம் எனவும் உயிரிழந்தவர்களின் படத்தையோ பெயரையோ பதிவிட முடியாது! எனவும் நினைவேந்தல் குழுவுக்கு புதுக்குடியிருப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

சிறிலங்கா விமானப்படையினரின் விமான தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர்களின் நினைவு தூபி ஒன்று வள்ளிபுனம் பகுதியில் அமைக்கப்பட்டு வந்தது. இந்த நினைவுத் தூபியில் மாணவர்களின் படங்களை பதிப்பதற்கு தடை விதித்துள்ள புதுக்குடியிருப்பு காவல்துறையினர் குறித்த பணிகளை முன்னெடுத்தவர்கள் சிலரை இன்று(11.08.19) காலை புதுக்குடியிருப்பு காவல் நிலையம் வருமாறு அழைத்திருந்துள்ளார்கள்.

எதிர்வரும் 14.08.19 அன்று 13 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு நினைவிற் கொள்ளப்படவுள்ள நிலையில் தூபியினை அமைக்கும் பணியினை முன்னெடுத்து வருபவர்களுக்கு அனுமதி இன்றி கட்டிட பணிகளை முன்னெடுக்க வேண்டாம் என்றும் பிரதேச சபையின் அனுமதியுடன் கட்டிட பணிகளை முன்னெடுக்குமாறும் காவத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டம் உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் படையினர் அமைக்கும் நினைவுத்தூபிகள் பிரதேச சபையின் அனுமதி இன்றி கட்டப்படுகின்றது. இந்த நினைவு நிகழ்வினை குழப்பும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாக விசாரணைக்கு சென்றவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கருத்து தெரிவிக்க